குவாடலஜாரா: மெக்சிகோவில் நடநது வரும் ஆடவர்களுக்கான உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 50மீ ரைபிள் பிரிவில், இந்தியாவின் இளம்வீரர் அகில் ஷியோரன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
மெக்சிகோ நாட்டின் குவாடலஜாரா நகரில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆடவர்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவின் தகுதிச் சுற்றில் இந்தியா சார்பாக பங்கேற்ற சஞ்சீவ் ராஜ்புத், அகில் ஷியோரன் மற்றும் சுவப்னில் குசாலே ஆகிய மூவரும் இறுதிச் சுற்றுக்கு தேர்வானார்கள்
இறுதிச் சுற்றில் இந்தியாவின் அகில் ஷியோரன் 455.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரியா நாட்டின் பெர்ன்ஹார்டு பிகல் 452 புள்ளிகளுடன் 2வது இடத்தினை பெற்றார்