ஏப்ரல் 7 முதல் இந்த வருடத்துக்கான ஐபிஎல் போட்டி ஆரம்பமாகவுள்ளது. முதல் நாளன்று மும்பை - சென்னை அணிகள் மோதவுள்ளன.
இந்த வருடம் ஐபிஎல் அமைப்பும் ஸ்டார் நிறுவனமும் இணைந்து ஐபிஎல் கீதம் என்றொரு பாடலை உருவாக்கியுள்ளன. அதன் காணொளி நேற்று வெளியிடப்பட்டது. ஹிந்தி, தமிழ், பெங்காலி, கன்னடம், தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பாராட்டு தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடங்க இன்னும் சில நாள்கள் இருந்தாலும் அருமையான முறையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்று பாராட்டியுள்ளார்.