டேவிஸ் கோப்பை வெற்றிக்கு இணைந்து விளையாடுவது அவசியம்

இந்திய இரட்டையர் வீரர்கள் டூர் போட்டிகளில் இணைந்து விளையாடாமல், டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஒருங்கிணைந்து விளையாடி வெற்றி பெறுவது கடினம் என்று முன்னாள்
டேவிஸ் கோப்பை வெற்றிக்கு இணைந்து விளையாடுவது அவசியம்

இந்திய இரட்டையர் வீரர்கள் டூர் போட்டிகளில் இணைந்து விளையாடாமல், டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஒருங்கிணைந்து விளையாடி வெற்றி பெறுவது கடினம் என்று முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் கூறியுள்ளார்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-சீனா மோதும் ஆட்டம் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. அதில் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ்-ரோஹன் போபண்ணா ஜோடி பங்கேற்பதென அகில இந்திய டென்னிஸ் சங்கம் முடிவு செய்தது.
கருத்து வேறுபாடு காரணமாக லியாண்டருடன் விளையாட விருப்பமில்லாத போபண்ணா, தான் 'ரிசர்வ்' வீரராக இருக்க விருப்பம் தெரிவித்தார். எனினும், பயஸுடன் அவர் ஜோடி சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து கேட்டதற்கு விஜய் அமிர்தராஜ் கூறியதாவது:
கருத்து வேறுபாடு இருக்கும் வீரர்களை ஒன்றாக களத்தில் இறக்குவது சரியா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஒரு இரட்டையர் ஜோடி டூர் போட்டிகளில் ஒருங்கிணைந்து விளையாடினால், டேவிஸ் கோப்பையிலும் இணைந்து விளையாடி வெற்றி பெற இயலும்.
அவர்கள் தொடர்ந்து இணைந்து, டூர் போட்டிகளில் விளையாடாத பட்சத்தில், டேவிஸ் கோப்பை போட்டியில் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும். ஏனெனில், இணைந்து விளையாடாத இருவரை திடீரென ஒரு போட்டியில் இணைந்து விளையாடச் செய்யும்போது அவர்களிடையே தடுமாற்றம் ஏற்படும்.
இந்தியாவில் ஜெய்தீப் முகர்ஜி-பிரேம்ஜித் லால், ஆனந்தும்-நானும், லியாண்டர்-மகேஷ் பூபதி என அனைத்து ஜோடிகளுமே எல்லா போட்டிகளிலும் இணைந்து விளையாடியதாலேயே சிறப்பாக ஆட முடிந்தது என்று விஜய் அமிர்தராஜ் கூறினார்.
சர்வதேச டூர் போட்டிகளில் லியாண்டர் பயஸும், ரோஹன் போபண்ணாவும் வெவ்வேறு வீரர்களுடன் ஜோடி சேர்ந்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com