நான் உங்கள் வீட்டுப் பிள்ளை: தமிழக ரசிகர்களின் பாசம் குறித்து ஹர்பஜன் சிங் உருக்கம்!

அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே, இந்த பந்தம் தொட்டு தொடரும் ஒரு பட்டு பாரம்பரியமாக தொடரட்டும்...
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை: தமிழக ரசிகர்களின் பாசம் குறித்து ஹர்பஜன் சிங் உருக்கம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணிக்குத் தேர்வாகியுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ட்விட்டரில் கூறியதாவது: 

நான் சரியானவன் அல்ல. சில நேரங்களில் முட்டாள் தனமான செய்திகளும் சொல்வது உண்டு. தேவை அற்ற நேரங்களில் சிரிப்பதும் உண்டு. சற்று வேடிக்கையானவன் தான், ஆனாலும் நிறம் மாறுவது இல்லை. என்னை விரும்பினாலும் வெறுத்தாலும் நான் ஒரு சத்தியம் செய்கிறேன். நான் உங்களை விரும்புகிறேன். அருமை. தமிழ்நாட்டுக்கு வருகை தந்த நாளில் இருந்து தமிழ் மக்கள் என் மேல் காட்டும் அளவு கடந்த பாசமும், நேசமும் என்னை வியக்கவைக்கிறது. உங்கள் வீட்டு பிள்ளையாக என்னை ஏற்று கொண்டமைக்கு நன்றி. அன்பால் என்னை ஆட்கொண்ட தமிழ்நாடே, இந்த பந்தம் தொட்டு தொடரும் ஒரு பட்டு பாரம்பரியமாக தொடரட்டும் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்பஜன் சிங்கை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com