ஆசியக் கோப்பை கால்பந்து: இந்தியா சிறப்பாக விளையாடும் பாய்சுங் பூட்டியா நம்பிக்கை

ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடும் என முன்னாள் கேப்டன் பாய்சுங் பூட்டியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடும் என முன்னாள் கேப்டன் பாய்சுங் பூட்டியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
வரும் 2019-ஆம் ஆண்டின் ஏஎப்சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா கடினமான குழுவில் இடம் பெற்றுள்ளது. பஹ்ரைன், தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள் போன்றவை வலுவானவையாக திகழ்ந்தாலும், இந்தியா 2-வது சுற்றுக்கு முன்னேறுவது ஒன்றும் கடினமாதில்லை.
நாம் இடம் பெற்றுள்ள பிரிவுக்காக மகிழ்ச்சி கொள்ள வேண்டும். தரவரிசைப் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளதற்கு வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வே காரணம். கொரியா, ஈராக், ஈரான், ஜப்பான் போன்ற பலமான அணிகள் பிரிவில் நாம் இடம் பெறாதது நன்மை தருவதாகும். 
இந்திய அணி வெளிநாடுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியும் சிறந்த ஒரு வாய்ப்பாகும். குறிப்பாக நியூஸிலாந்து, கென்யா போன்ற அணிகள் கலந்து கொள்கின்றன. ஆசியக் கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக துபாயில் பல்வேறு போட்டிகளில் இந்தியா ஆட வேண்டும் என்றார் பூட்டியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com