மும்பை: ஆளைப் பார்த்தால் பெரிய ஹிட்டர் போல் தெரியவில்லை; ஆனால் பெரிய ஷாட்களை ஆடும்போது பந்துகளை எல்லைக்கோட்டினைத் தாண்டி பறக்க விடுகிறார் என்று அம்பட்டி ராயுடுவை சிஎஸ்கே அணித்தலைவர் தோனி புகழ்ந்துள்ளார்.
இதுதொடர்பாக தோனி கூறியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தி பின் வருமாறு:
இந்த ஐபிஎல் 2018 தொடருக்கு முன்பே அணியில் நான் ராயுடுவுக்காக இடம் ஒதுக்க வேண்டியிருந்தது. ஏனெனில் நான் அவரைத் அவ்வாறான ஒரு உயர்ந்த தரநிலையில் வைத்திருக்கிறேன்.
பெரும்பாலான அணிகள் ஸ்பின்னர்களைக் கொண்டு எதிர் அணியின் தொடக்க வீரர்களை கட்டுப்படுத்தலாம் என்று நினைக்கும்; ஆனால் ராயுடு ஸ்பின், வேகப்பந்து இரண்டைச் சமாளிப்பதில் சிறந்து விளங்குகிறார்.
ஆளைப் பார்த்தால் பெரிய ஹிட்டர் போல் தெரியவில்லை; ஆனால் பெரிய ஷாட்களை ஆடும்போது பந்துகளை எல்லைக்கோட்டினைத் தாண்டி பறக்க விடுகிறார்
ராயுடுவை தொடக்க வீரராக்கி, கேதார் ஜாதவ் மீண்டும் உடற்தகுதி பெற்று விட்டால் அவரை 4, 5 நிலையில் இறங்குவதே என்னுடைய திட்டம்
இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.