2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான ஜரோப்பிய 'கோல்டன் ஷூ' (தங்கக் காலணி) விருது வென்றார் கால்பந்து ஜாம்பவான் வீரர் லயோனல் மெஸ்ஸி.
உலகின் தலைசிறந்த நட்சத்திர கால்பந்து வீரர்களில் ஒருவராகத் திகழும் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி, இதை 5-ஆவது முறையாக வென்று (அதிக முறை) சாதனைப் படைத்துள்ளார்.
முன்னதாக, 2010, 2012, 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் இவ்விருதை வென்றுள்ளார். இதன்மூலம் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனையை (4 முறை) முந்தினார்.
பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வரும் லயோனல் மெஸ்ஸி, இந்த 2017-2018 சீசனில் 34 கோல்களுடன் 68 தனிநபர் புள்ளிகளைப் பெற்று இச்சாதனையைப் படைத்துள்ளார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற லாலீகா கால்பந்து தொடரிலும் அதிக கோல்களை அடித்த வீரராகத் திகழ்கிறார்.