நியூஸிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் பந்துவீச்சாளர்கள் உதவியுடன் ஓரே ஓவரில் 43 ரன்கள் எடுத்து நார்த்தர்ன் டிஸ்ட்டிரிக்ட்ஸ் அணி வீரர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஜோ கார்டர்-பிரெட் ஹாம்ப்டன் இணை சென்ட்ரல் டிஸ்டிரிக்டிஸ் அணியுடன் மோதிய ஆட்டத்தில் 6 சிக்ஸர்களை விளாசினர். ஆனால் எதிரணி பந்துவீச்சாளர் வில்லேம் லூதிக் மேலும் நோ பால்களை வீசினார்.
முதல் பந்தில் 4, 6 பிளஸ் நோபால், 6 பிளஸ் நோபால், 6, 1, 6, 6,6 என மொத்தம் ஓரே ஓவரில் 43 ரன்களை கார்டர்-ஹாம்ப்டன் இணை எடுத்து உலக சாதனை புரிந்தது.
பந்துவீச்சாளர் வில்லேம் லூதிக் 1-42 என தனது கடைசி ஓவரை வீச வந்த நிலையில் அவர் 1-85 ரன்கள் என நிறைவு செய்ய நேர்ந்தது.
இதற்கு முன்பு ஜிம்பாப்வே அணி வீரர் எல்டன் சிகும்புரா வங்கதேசத்தில் நடைபெற்ற முதல்தர ஒரு நாள் ஆட்டத்தில் 39 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.