மனைவி சானியா மிர்ஸா, குழந்தையுடன் நேரம் செலவிடுவதற்காக டி10 லீக் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார் பாக். கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்.
இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸாவும்-ஷோயிப் மாலிக்கும் கடந்த 2010 ஏப்ரலில் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே சானியாவுக்கு அக். 29-இல் ஆண் குழந்தை பிறந்தது.
முன்னணி வீரரான ஷோயிப் மாலிக், ஷார்ஜாவில் நடைபெறவுள்ள டி10 லீக் ஆட்டத்தில் பஞ்சாப் லெஜென்ட்ஸ் அணி சார்பில் விளையாடுகிறார். முதல் சீசனில் நடைபெற்ற ஆட்டத்தில் பங்கேற்ற ஷோயிப் தற்போது மனைவி, குழந்தை ஈஷானுடன் நேரம் செலவிடுவதற்காக டி10 போட்டியில் இருந்து விலகுவதாக தனது சுட்டுரையில் (டுவிட்டர்) தெரிவித்துள்ளார்.