புரோ கபடி லீக் ஒரு பகுதியாக கடைசி கட்ட வைல்ட் கார்டு ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளன.
இதற்கான குலுக்கல் மும்பையில் செவ்வாய்க்கிழமை புரோ கபடி லீக் ஆணையர் அனுபம் கோஸ்வாமி, நடிகர் விக்கி கெளஷல் முன்னிலையில் நடைபெற்றது.
இதன்படி மண்டல வைல்ட் கார்டு ஆட்டங்கள் வரும் டிசம்பர் 21 முதல் 27-ஆம் தேதி வரை கொல்கத்தாவில் நடைபெறுகிறது. மண்டல போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்றொரு மண்டலத்தைச் சேர்ந்த அணியுடன் மோதும்.
21.12.2018-புணேரி பல்தான்-தெலுகு டைட்டன்ஸ், 22.12.18-யு மும்பா-யுபி யோத்தாஸ், 23.12.2018-பெங்கால் வாரியர்ஸ்-தபாங் தில்லி, 25.12.2018-ஹரியாணா ஸ்டீலர்ஸ்-தமிழ் தலைவாஸ், 26.12.2018-குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ்-பாட்னா பைரேட்ஸ், 27.12.2018- ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்- பெங்களூரு புல்ஸ்.