போலந்தைச் சேர்ந்த உலகின் முன்னாள் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனை அனிஸ்கா ராவன்கா 13 ஆண்டுகள் விளையாடிய நிலையில் புதன்கிழமை ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2012-இல் இரண்டாம் நிலை வீராங்கனையாக இருந்த அனிஸ்கா அதே ஆண்டில் விம்பிள்டனில் இரண்டாம் இடம் பெற்றார். பின்னர் 20 டபிள்யுடிஏ பட்டங்களை வென்றார். கடந்த 2015-இல் டபிள்யுடிஏ பைனல்ஸ் பட்டமும் அடங்கும். தொடர் சுகாதார பிரச்னைகளாலும், நீண்ட நேரம் ஆட முடியாததாலும், எதிர்பார்ப்புக்கு ஏற்ப உடலும் ஒத்துழைக்கவில்லை. இதனால் டென்னிஸ் ஆடுவதில் இருந்து ஓய்வு பெறுகிறேன் எனத் தெரிவித்தார்.