கொல்கத்தாவில் நடைபெற்ற டாடா ஸ்டீல் இந்தியா பிளிட்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.
முதல் கட்ட சுற்றுக்கு பின் கடந்த செவ்வாய்க்கிழமை 4-ஆவது இடத்தில் இருந்த ஆனந்த் போட்டியின் கடைசி நாளான புதன்கிழமை இரவு உலகின் மூன்றாம் நிலை வீரர் அமெரிக்காவின் நகமுராவுடன் நடந்த 9 சுற்று ஆட்டங்களில் 6 வெற்றி, 3 டிரா செய்து முதல் பட்டம் வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்.
இந்த நாள் மிகவும் மகிழ்ச்சியைத் தரும் நாளாகும். உற்சாகத்துடன் விளையாடி போட்டியை எதிர்கொண்டேன். கடந்த 1986-இல் முதல் கிராண்ட்மாஸ்டர் ஆட்டத்தை இங்கு தான் விளையாடினேன் என்றார். கடந்த 2013-இல் சென்னையில் நடந்த உலக சாம்பியன் போட்டியில் மாக்னஸ் கார்ல்செனிடம் தோற்ற பின் இந்தியாவில் ஆடும் முதல் போட்டி இதுவாகும்.