கோலி மைதானத்தில் அமைதியாக இருந்தால் தான் ஆச்சர்யம் என வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.
தான் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிக்கப் போவதில்லை என கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கம்மின்ஸ் கூறியதாவது:
மோதல் போக்கை கடைபிடிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ல கோலி, அவ்வாறு இருந்தால் தான் ஆச்சர்யம். அவர் சிறந்த போட்டியாளராக திகழ்கிறார், நாங்களும் போட்டி மனப்பான்மையோடு ஆடுவோம். கோலியை வித்தியாசமாக கருதமாட்டோம். முந்தைய 2 ஆண்டுகளில் நேரிட்டது போல் எதுவுமே நேராது.
தென்னாப்பிரிக்காவும் நிகழாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற தொடரின் போது, கோலியுடன் எந்தவித மோதல்போக்கையும் வைக்கவில்லை. எங்கள் டெஸ்ட் அணி ஒன்று கூடியதும், எப்படி விளையாடுவது, தனி நபர்களை எவ்வாறு சமாளிப்பது தான் என்றார்.