ஆந்திரம்-தமிழகம் இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் ஆந்திராவின் ஓங்கோலில் நேற்று தொடங்கியது. நேற்று ஆந்திரம் 198/8 ரன்களை மட்டுமே எடுத்தது. தமிழக வேகப்பந்து வீச்சாளர் முகமது 4, சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் இன்று தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆந்திர அணி, 84.4 ஓவர்களில் 216 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கிரிநாத் ரெட்டி 86 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முகமது 4, நடராஜன் 3, சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.