ஐஎஸ்எல்: இடமாற்றம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டப் போட்டியில், பெங்களூரு எஃப்சி அணி தனது சொந்த மண்ணில் ஆடும் ஆட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டப் போட்டியில், பெங்களூரு எஃப்சி அணி தனது சொந்த மண்ணில் ஆடும் ஆட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக பெங்களூரு அணி வரும் 31-ஆம் தேதி ஸ்ரீ கண்டீவரா மைதானத்தில் அட்லெடிகோ கொல்கத்தா அணியை எதிர்கொள்வதாகவும், அதே அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள டிசம்பர் 13-ஆம் தேதி கொல்கத்தா செல்வதாகவும் இருந்தது.
இந்நிலையில், கர்நாடக அரசுக்கு கன்னட தின கொண்டாட்டத்துக்காக ஸ்ரீ கண்டீவரா மைதானம் தேவைப்பட்டதை அடுத்து, ஆட்டத் தேதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய அட்டவணையின்படி, பெங்களூரு அணி வரும் 31-ஆம் தேதி கொல்கத்தாவில் அட்லெடிகோ கொல்கத்தாவை சந்திக்கிறது. பிறகு, டிசம்பர் 13-ஆம் தேதி தனது சொந்த மண்ணில் ஸ்ரீ கண்டீவரா மைதானத்தில் அதே அணியுடன் மோதுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com