மே.இ. தீவுகளுக்கு எதிரான தொடர்: இந்திய ஒருநாள் அணி இன்று அறிவிப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வியாழக்கிழமை தேர்வு


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வியாழக்கிழமை தேர்வு செய்யப்படுகிறது.
எனினும், இந்த அணி முதல் 3 ஆட்டங்களுக்கானதா, அல்லது ஒட்டுமொத்த தொடருக்குமானதா என தெளிவுபடத் தெரிவிக்கப்படவில்லை. தோனியின் பேட்டிங் ஃபார்ம் மோசமடைந்துள்ள நிலையில், பேட்டிங்கிற்கு பக்கபலமாக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. 
ஒட்டுமொத்த தொடருக்கும் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரியும் நிலையில், அவருக்கான பணிச்சுமையும் முக்கியமான விவகாரமாக கவனத்தில் கொள்ளப்படும். இருப்பினும், தோனிக்கென ஒரு பக்கபலமான பேட்ஸ்மேனை தேர்வு செய்வதே தேர்வாளர்களின் முக்கிய நோக்கமாக இருக்கும் எனத் தெரிகிறது.
தினேஷ் கார்த்திக் ஒரு தேர்வாக உள்ளபோதும், முக்கியமான தருணங்களில் அவரது நிலைத்தன்மை மற்றும் ஆட்டத்திறன் குறித்து அணி நிர்வாகம் கவலை கொண்டுள்ளது. வீரர்களின் வரிசையிலும் மாற்றம் கொண்டுவரப்படலாம் எனத் தெரிகிறது.
காயம் காரணமாக ஒருநாள் போட்டிகளில் இருந்து கேதார் ஜாதவ் வெளியேறுவதால், மிடில் ஆர்டரில் காலியாகும், அந்த இடத்தை அம்பட்டி ராயுடு தக்க வைக்கலாம். விராட் கோலி விளையாட முடிவு செய்தாலும் இதில் மாற்றமிருக்காது எனத் தெரிகிறது.
பந்துவீச்சைப் பொருத்த வரையில், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா அணிக்குத் திரும்பும் நிலையில், ஜடேஜாவும் தனக்கான இடத்தை உறுதி செய்கிறார். எனவே, மணீஷ் பாண்டே அணியிலிருந்து விலக்கப்படலாம் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com