ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிச் சுற்றில் ஜோகோவிச்-அலெக்சாண்டர் வெரேவ் ஆகியோர் மோதுகின்றனர்.
உலகின் மூன்றாம் நிலை வீரரான ஜோகோவிச் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை 7-6, 6-3 என நேர் செட்களில் வீழ்த்தினார்.
மற்றொரு காலிறுதியில் உலகின் நான்காம் நிலை வீரர் வெரேவ் 6-4, 6-4 என நேர் செட்களில் பிரிட்டனின் கெயில் எட்மண்டை வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு காலிறுதியில் இரண்டாம் நிலை வீரர் ரோஜர் பெடரர் 6-4, 7-6 என ஜப்பானின் நிஷிகோரியையும், குரோஷிய வீரர் போர்னா கோரிக் 7-5, 6-4 என மேத்யூ எப்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.