டிராவில் முடிந்தது இந்தியா-சீனா நட்பு கால்பந்து ஆட்டம்

இந்தியா-சீன அணிகள் இடையே சனிக்கிழமை இரவு நடைபெற்ற நட்பு கால்பந்து ஆட்டம் 0-0 என கோலின்றி டிராவில் முடிந்தது.

இந்தியா-சீன அணிகள் இடையே சனிக்கிழமை இரவு நடைபெற்ற நட்பு கால்பந்து ஆட்டம் 0-0 என கோலின்றி டிராவில் முடிந்தது.
 ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கால்பந்து 2019-க்கு தயாராகும் வகையில் இந்திய அணி பல்வேறு பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.
 இதன் ஒரு பகுதியாக பலம் வாய்ந்த சீனாவுடன் கால்பந்து நட்பு ஆட்டத்துக்கு அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு ஏற்பாடு செய்தது.
 ஷாங்காய் அடுத்த சுஷோ நகரில் நடைபெற்ற நட்பு ஆட்டத்தில் சீனா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்த முனைந்தது. அந்த அணி வீரர்களின் பல்வேறு கோல் போடும் முயற்சிகளை இந்திய கோல்கீப்பர் குர்பிரீத் சிங் அபாரமாக தடுத்தார். பலமுறை இந்திய தற்காப்பு அரணுக்குள் ஊடுருவிய போதிலும் சீன வீரர்கள் முயற்சி தோல்வியில் முடிந்தது. 13-ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் பிரிதம் அடித்த பந்தை சீனத்தரப்பு தடுத்து விட்டது.
 மேலும் இந்திய மூத்த வீரர் சுனில் சேத்ரியும் கோலடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். இந்திய அணி பலம் வாய்ந்த சீனாவை 0-0 என டிரா செய்தது வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com