கடின உழைப்பால் நமது வாழ்வில் அனைத்தும் சாத்தியமாகும் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதையடுத்து மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளது.
இந்நிலையில், விராட் கோலி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவருடைய இரு புகைப்படங்களை ஒப்பிட்டு வெளியிட்ட பதிவு அவரது ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அதில், குறிக்கோள் மற்றும் கடின உழைப்பால் அனைத்தும் சாத்தியமாகும். எனவே, தொடர்ந்து நம்பிக்கையுடன் உழைத்துக்கொண்டிருங்கள் என்று பதிவிட்டிருந்தார்.