ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய பாரா போட்டிகள் கடந்த சனிக்கிழமையுடன் நிறைவடைந்தன. இதில் 15 தங்கம் உள்பட 72 பதக்கங்களுடன் இந்தியா 9-ஆவது இடத்தைப் பெற்றது.
ஆசிய பாரா போட்டிகளில் 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா மொத்தம் 72 பதக்கங்களுடன் 9-ஆவது இடத்தைப் பெற்றது.
இந்நிலையில், ஆசிய பாரா போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சீனா, தென்கொரியா, ஈரான் உள்ளிட்டவை முறையே முதல் மூன்றிடங்களைப் பெற்றன.
கடந்த 2014 ஆசிய பாரா போட்டியில் இந்தியா 3 தங்கம், 14 வெள்ளி, 1 வெண்கலத்துடன் வெறும் 33 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.