இந்தியாவின் நெ.1 சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் திகழ்வார் என ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார்.
இந்திய அணி வீரர்கள் குறித்து சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியதாவது:
முதல் நாள் ஆடுகளத்தில் தன்னால் என்ன செய்யமுடியும் என்பதை நிரூபித்துள்ளார் குல்தீப் யாதவ். பந்தை இரு வழிகளிலும் அவரால் சுழலவைக்கமுடியும். வருங்காலத்தில் அவர் இந்தியாவின் முக்கியமான வீரராக, நெ.1 வீரராக இருப்பார். இங்கிலாந்தில் அவருக்கு ஏற்ற சூழ்நிலை அமையவில்லை. அவரால் நினைத்ததைச் செய்யமுடியவில்லை. அவருக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. வருங்காலத்தில் அவரை நம்பி இந்திய அணி இருக்கும் என்று பாராட்டியுள்ளார்.
பிருத்வி ஷா குறித்து கூறியதாவது: பயமில்லாமல் ஆடுகிறார் பிருத்வி ஷா. பள்ளிக் காலங்களிலும் ரஞ்சிப் போட்டியிலும் நிறைய ரன்கள் அடித்ததால் நம்பிக்கையுடன் உள்ளார். இது பிசிசிஐயின் உள்ளூர் கிரிக்கெட்டின் தரத்தை வெளிப்படுத்துகிறது என்று பிருத்வி ஷாவையும் ஹர்பஜன் பாராட்டியுள்ளார்.