இலங்கையுடனான தொடரை வென்றது இங்கிலாந்து

இலங்கையுடன் ஒரு நாள் தொடரை 3-0 என கைப்பற்றியது இங்கிலாந்து.
இலங்கையுடனான தொடரை வென்றது இங்கிலாந்து

இலங்கையுடன் ஒரு நாள் தொடரை 3-0 என கைப்பற்றியது இங்கிலாந்து.
 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இங்கிலாந்து பங்கேற்று ஆடி வருகிறது. முதல் ஒரு நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் அடுத்த இரண்டு ஆட்டங்களை இங்கிலாந்து வென்றது.
 நான்காவது ஒரு நாள் ஆட்டம் கண்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை குவித்தது. (நிரோஷன் டிக்வெலா 52, தினேஷ் சண்டிமால் 33, தஸுன் ஷனகா 66, திஸாரா பெரைரா 44). மொயின் அலி 2-55. பின்னர் இங்கிலாந்து அணி ஆடிய நிலையில் 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை எடுத்திருந்தது. (ஜேஸன் ராய் 45) ஜோ ரூட் 32, மொர்கன் 31 ஆட்டமிழக்காமல் இருந்தனர். அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.
 இறுதியில் டக்வொர்த் லெவிஸ் டிஎல்எஸ் முறையில் ரன் ரேட் கணக்கிடப்பட்டு 18 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது.
 இத்தொடரில் பெரும்பாலான ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இறுதி ஒருநாள் ஆட்டம் கொழும்புவில் வரும் 23-ஆம் தேதி நடக்கிறது. பின்னர் 2 டி20 ஆட்டம், 3 டெஸ்ட் ஆட்டங்கள் நடக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com