டென்மார்க் ஓபன்: இறுதியில் சாய்னா

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் இறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் தகுதி பெற்றார். ஆடவர் அரையிறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.
டென்மார்க் ஓபன்: இறுதியில் சாய்னா

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் இறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் தகுதி பெற்றார். ஆடவர் அரையிறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.
 ஓடென்ஸ் நகரில் நடைபெறும் இப்போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரர் கென்டோ மொமடோவை எதிர்கொண்டார்.
 இதில் 16-21, 12-21 என்ற கேம் கணக்கில் 44 நிமிடங்களில் ஸ்ரீகாந்த் தோல்வியைத் தழுவி வெளியேறினார்.
 சாய்னா அபாரம்: மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜார்ஜியாவின் கிரேகோரியா மாரிஸ்காவுடன் நடைபெற்ற அரையிறுதியில் சாய்னா முதல் கேமை 21-11 என 13 நிமிடங்களில் வென்றார். இரண்டாவது கேமை 21-12 என 17 நிமிடங்களில் எளிதாக வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தார் சாய்னா. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனை டை சூ யிங்குடன் மோதுகிறார்.
 மகளிர் இரட்டையர் காலிறுதியில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி இணை தோல்வியுற்று வெளியேறியது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com