துளிகள்...

ஆஸி. ஏ மகளிர் அணி உடன் நடைபெறவுள்ள டி20 தொடருக்காக 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. மும்பையில் அக்டோபர் 22, 24, 26 தேதிகளில் 3 டி20 ஆட்டங்கள் நடக்கின்றன. .

* ஆஸி. ஏ மகளிர் அணி உடன் நடைபெறவுள்ள டி20 தொடருக்காக 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. மும்பையில் அக்டோபர் 22, 24, 26 தேதிகளில் 3 டி20 ஆட்டங்கள் நடக்கின்றன. .
* யூத் ஒலிம்பிக் ஜூடோவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை தபாபி தேவி தான் அணிந்திருந்த விளையாட்டு சீருடையை சுவிட்சர்லாந்தில் உள்ள ஐஓசி ஒலிம்பிக் அருங்காட்சியகத்துக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். 
* சீனாவில் நடைபெற்று வரும் நிங்போ ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தகுதி பெற்றுள்ளார். அரையிறுதியில் அவர் 6-2, 6-2 என செர்பிய வீரர் மியோமிரை வீழ்த்தினார்.
* புடாபெஸ்டில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திரம் சுமித் மாலிக் 6-1 என்ற புள்ளிக்கணக்கில் கஜகஸ்தான் வீரர் இன்கர் எர்முகம்பேட்டை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். 
* மீடூ பாலியல் புகார் கூறப்பட்டுள்ள பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி பதிலளிப்பதற்கான காலஅவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் சுதந்திரமான, வெளிப்படையான விசாரணை நடைபெற ஏதுவாக ஜோரி பதவி விலக வேண்டும் என பிசிசிஐ நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com