பெங்கால் வாரியர்ஸ்-யுபி யோத்தாஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டம் 40-40 என டிராவில் முடிவடைந்தது.
புரோ கபடி லீக் சீசன் 6 போட்டிகள் இரண்டாவது கட்டம் ஹரியாணா சோனிப்பட்டில் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற பெங்கால்-யுபி அணிகள் இடையிலான ஆட்டம் துவக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்தது.
ஜெங்குன் லீ துவக்கத்திலேயே 4 ரைடு புள்ளிகளை ஈட்டித் தந்தார். யுபி அணியும் பதிலுக்கு 9 ரைடு புள்ளிகளை பெற்றது. முதல் பாதி நிறைவில் 18-15 என பெங்கால் முன்னிலை பெற்றது. இறுதியில் 40-40 என ஆட்டம் டிராவில் முடிந்தது.
புணே திரில் வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் புணேரி பல்டன் அணி 33-32 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. மும்பா வீரர் சித்தார்த் தேசாய் செய்த தவறான ரைடு, புணே அணிக்கு சாதமாக முடிந்தது. புணே வீரர் நிதின் டோமர் 13 ரைடு புள்ளிகளையும், கிரீஸ் எர்னாக் 6 டேக்கிள் புள்ளிகளையும் பெற்றனர். முதல் பாதியில் புணே 17-12 என முன்னிலை பெற்றிருந்தது.