ஐஎஸ்எல் கால்பந்து: புணேவை வீழ்த்தியது பெங்களூரு

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இன்றைய (திங்கள்கிழமை) போட்டியில் புணே சிட்டி அணியை பெங்களூரு எப்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இன்றைய (திங்கள்கிழமை) போட்டியில் புணே சிட்டி அணியை பெங்களூரு எப்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் புணே சிட்டி அணியும், பெங்களூரு எப்சி அணியும் மோதின. போட்டி தொடங்கிய முதல் சில நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்காமலேயே விளையாடி வந்தனர். புணே அணி கிடைத்த ஃபீர் கிக் வாய்ப்பை கோலாக மாற்ற தவறியது. 

இதைத்தொடர்ந்து, போட்டியின் 41-ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணி சார்பாக சுனில் சேத்ரி கோல் முதல் கோலை அடித்தார். அதே முனைப்புடன் அடுத்த 2-ஆவது நிமிடத்தில்  (43-ஆவது நிமிடம்) மீண்டும் ஒரு கோல் அடித்து சேத்ரி அசத்தினார். இதனால், முதல் பாதி ஆட்டநேர முடிவில் பெங்களூரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 

தொடர்ந்து, போட்டியின் 2-ஆவது பாதி ஆட்டத்தை புணே அணி சற்று நெருக்கடியுடன் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் பெங்களூரு அணியின் ஃபெடோர் அந்த அணிக்காக 3-ஆவது கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம், அந்த அணி 3-0 என வலுவான முன்னிலை பெற்றது. 

அதன்பிறகு, 90-ஆவது நிமிடம் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. போட்டியின் நடுவர் 4 கூடுதல் நிமிடங்கள் வழங்கினார். அதில், 4-ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு ஃபிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி அந்த அணியின் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது கோல் கம்பத்தில்பட்டு வெளியேறியது. இதனால், அது கோலாக மாறவில்லை. 

இதையடுத்து, போட்டியின் முடிவில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com