செய்திகள்
கையில் நீண்ட நாள் காயம்: பெடரர் தகவல்
கையில் நீண்ட நாள் காயம் உள்ளது என உலகின் மூன்றாம் நிலை டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.
கையில் நீண்ட நாள் காயம் உள்ளது என உலகின் மூன்றாம் நிலை டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது-
கடந்த ஜூன் மாதம் முதல் கையில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வருகிறேன். புல்தரை மைதானத்தில் பயிற்சியைத் தொடங்கிய போது இந்த காயம் உண்டானது. கையில் கடும் வலியால் கடந்த 3 மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளேன்.
ஆட்டத்தின் முதல் 10 நிமிடங்களிலேயே கை வலி தென்படுவதால் விளையாடுவதில் சிக்கல் ஏற்படுகிறது என்றார் பெடரர்.
தற்போது பேஸல் ஏடிபி ஓபன் போட்டியில் பங்கேற்கிறார் பெடரர். நடப்பு சாம்பியன் அலெக்சாண்டர் வெரேவ், மரின் சிலிக், டெனிஸ் ஷபோலபோவ், சிட்சிபாஸ் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொள்கின்றனர்.