சச்சின், வார்னரை முறியடித்து ரோஹித் உலக சாதனை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 152 ரன்களுடன் 20-ஆவது சதம் அடித்த ரோஹித் சர்மா, சச்சின்,
புதிய உலக சாதனை படைத்த ரோஹித் சர்மா.
புதிய உலக சாதனை படைத்த ரோஹித் சர்மா.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 152 ரன்களுடன் 20-ஆவது சதம் அடித்த ரோஹித் சர்மா, சச்சின், வார்னரை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
கோலி-ரோஹித் இணை அதிரடியாக ஆடி 246 ரன்களை சேர்த்தது. 20-ஆவது சதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் பெற்றார். மேலும் கோலி ஆட்டமிழந்த போதிலும், நிலைத்து ஆடிய ரோஹித் வெற்றிக்கு வித்திட்டார். 152 ரன்களை விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஏற்கெனவே சச்சின், வார்னர் ஆகியோர் 5 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்திருந்தனர். ஆனால் ரோஹித் அதை முறியடித்து 6 முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். 
மேலும் அவர் மூன்று இரட்டை சதத்தையும் அடித்த பெருமைக்கு உரியவராக திகழ்கிறார். நாங்கள் 5-ஆவது முறை சேர்ந்து இரட்டை சதத்தை சேர்த்துள்ளோம். இவ்வாறு இணைந்து ஆடும் போது, அணி தான் பலன் பெறும். சிறப்பானதாக இருந்தது என கோலி பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com