டெஸ்ட்: இந்திய அணியை மீண்டும் வெறுப்பேற்றும் இங்கிலாந்து பின்வரிசை வீரர்கள்! 304/8

பின்வரிசை வீரர்களின் அருமையான பேட்டிங்கினால் 114-வது ஓவரில் 300 ரன்களைக் கடந்து இந்திய ரசிகர்களை சோகத்தில்...
டெஸ்ட்: இந்திய அணியை மீண்டும் வெறுப்பேற்றும் இங்கிலாந்து பின்வரிசை வீரர்கள்! 304/8

லண்டனில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான இறுதி மற்றும் 5-வது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட்டை இழந்து 198 ரன்களை எடுத்திருந்தது. ஓய்வு பெறவுள்ள அந்த அணியின் தொடக்க வீரர் அலாஸ்டர் குக் அபாரமாக ஆடி 71 ரன்களை குவித்தார்.

இந்நிலையில் இன்று தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி, தொடர்ந்து இந்திய அணிக்குக் கடும் சிரமங்களை அளித்தது. சிறப்பாகப் பந்துவீசியபோதும் அருமையான தடுப்பாட்டத்தால் விக்கெட்டுகளை விழாமல் பட்லரும் ரஷித்தும் பார்த்துக்கொண்டார்கள். எனினும் 51 பந்துகள் வரை தாக்குப்பிடித்த ரஷித், 15 ரன்களில் பூம்ரா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார். அதன்பிறகு பட்லருடன் இணைந்த பிராட், அவரும் தன் பங்குக்குச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 61 பந்துகளில் 50 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். 5 பவுண்டரிகளுடன் 84 பந்துகளில் அரை சதம் எட்டினார் பட்லர். 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் என்கிற நிலைமையில் இருந்த இங்கிலாந்து அணி பின்வரிசை வீரர்களின் அருமையான பேட்டிங்கினால் 114-வது ஓவரில் 300 ரன்களைக் கடந்து இந்திய ரசிகர்களை சோகத்தில் தள்ளியது. 

2-ம் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 115 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 63, பிராட் 36 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 30 ஓவர்களைச் சிறப்பாக வீசியும் ஒரு விக்கெட்டும் எடுக்காமல் மிகவும் ஏமாற்றமடைந்தார் ஷமி. பூம்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com