நேஷன்ஸ் லீக் கால்பந்து: இத்தாலியை வீழ்த்தியது போர்ச்சுகல்

யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலியை 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வென்றது.
கோலடித்த ஆன்ட்ரே சில்வா.
கோலடித்த ஆன்ட்ரே சில்வா.


யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலியை 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வென்றது.
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் என்ற புதிய போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4 பிரிவுகளாக நாடுகள் பிரிக்கப்பட்டு அதில் முதலிடம் பெறும் 4 அணிகள் வரும் 2019-இல் நடைபெறும் இறுதி லீக் ஆட்டத்தில் மோதும்.
இதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை நள்ளிரவு லிஸ்பனில் இத்தாலி-ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகல் இடையே ஆட்டம் நடைபெற்றது. இரு அணிகளும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்த முனைந்ததால் எவரும் கோலடிக்கவில்லை. ஆட்டம் முடிய கடைசி நிமிட நேரத்தில் போர்ச்சுகல் வீரர் ஆன்ட்ரே சில்வா அடித்த ஓரே கோல் மூலம் அந்த அணி வென்றது. கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத நிலையிலும் போர்ச்சுகல் அணி சிறப்பாக விளையாடி வென்றது.
இத்தாலி தனது முதல் ஆட்டத்தில் போலந்துடன் டிரா கண்டது. இதனால் அந்த அணி 1 புள்ளியுடன் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com