டாக்காவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (சாஃப்) சுசூகி கோப்பைக்கான போட்டியில் இந்தியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மாலத்தீவு சாம்பியன் பட்டம் வென்றது.
நடப்பு சாம்பியன் இந்திய அணி 8-ஆவது முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்போடு இப்போட்டியில் பங்கேற்றது. அரையிறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் வைரியான பாகிஸ்தானை வீழ்த்தியது. மாலத்தீவு அணி 3-0 என நேபாளத்தை வீழ்த்தியது. இந்நிலையில் டாக்கா தேசிய மைதானத்தில் சனிக்கிழமை நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று மாலத்தீவு சாம்பியன் பட்டம் வென்றது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே மாலத்தீவு அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது பாதியிலும் சிறப்பாக ஆடி 2-1 என வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.