2018 ஆசியக் கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள இந்திய-பாகிஸ்தான் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை மணந்துள்ள பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சில நாள்களுக்குச் சமூகவலைத்தளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அவரிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டு தொந்தரவு செய்வதால் அவர் இம்முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் தொடங்குவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு, சமூகவலைத்தளங்களை விட்டு வெளியேறுவது பாதுகாப்பானது. ஏனெனில் இங்கே மடத்தனமாகக் கூறப்படப்போகிற கருத்துகள், கர்ப்பிணியை மட்டுமல்லாமல் சாதாரண மனிதனையும் உடல்நலமில்லாமல் செய்துவிடும். பிறகு பார்க்கலாம் மக்களே. ஞாபகம் கொள்ளுங்கள், இது கிரிக்கெட் ஆட்டம் மட்டுமே என்று கூறியுள்ளார்.