சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் மற்றும் சிந்து ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தாய்லாந்து வீரர் சுபான்யூ அவிஹிங்சானானை எதிர்கொண்டார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஸ்ரீகாந்த் 21-12, 15-21, 24-22 என்ற நேர் செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து தாய்லாந்தின் புசனான் ஓங்பம்ரங்ஃபனை எதிர்கொண்டார். அதில், சிந்து 21-23, 21-13, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரான்கி ரெட்டி மற்றும் அஷ்வினி பொன்னப்பா இணை சீன இணையிடம் 14-21, 11-21 என்கிற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தனர். ஆடவர் இரட்டையர் பிரிவில் மனு ஆத்ரி மற்றும் சுமீத் ரெட்டி சீன தைபே இணையிடம் 9-21, 10-21 என்கிற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினர்.