விராட் கோலி, மீராபாய் சானுவுக்கு கேல்ரத்னா விருது: மத்திய அரசு அறிவிப்பு

விராட் கோலி, மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜிவ்காந்தி கேல்ரத்னா விருதுகள் உள்பட அர்ஜுன, துரோணாச்சார்யா, தயான்சந்த், விருதுக்குரியவர்களை மத்திய விளையாட்டுத்
விராட் கோலி, மீராபாய் சானுவுக்கு கேல்ரத்னா விருது: மத்திய அரசு அறிவிப்பு


விராட் கோலி, மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜிவ்காந்தி கேல்ரத்னா விருதுகள் உள்பட அர்ஜுன, துரோணாச்சார்யா, தயான்சந்த், விருதுக்குரியவர்களை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன்படி வியாழக்கிழமை மத்திய அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்ட அறிவிப்பு:
வரும் 25-ஆம் தேதி நடைபெறும் விழாவில் கிரிக்கெட் வீரர் கோலி, பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு கெளரவமிக்க ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுகள் வழங்கப்படும்.
தயான்சந்த் விருதுகள்: சத்தியதேவ் பிரசாத் (வில்வித்தை), பாரத் குமார் சேத்ரி (ஹாக்கி), பாபி அலோஸியஸ் (தடகளம்), செளகலே தத்து (மல்யுத்தம்).குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 25-ஆம் தேதி விருதுகளை வழங்குகிறார்.
இதற்கிடையே ஒழுங்கீனம் காரணமாக துரோணச்சார்யா விருதுகள் பட்டியலில் இருந்து வில்வித்தை பயிற்சியாளர் ஜிவன்ஜோத் சிங் தேஜா பெயர் நீக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இது வில்வித்தை வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் ஒரு சிறந்த பயிற்சியாளர், இந்திய வில்வித்தை அணியை சிகரத்துக்கு கொண்டு சென்றவர். கடந்த 2013-இல் இருந்து வீரர்களுடன் உள்ளார். அவரது சேவை, பயிற்சிக்கு உரிய அங்கீகாரம் தர வேண்டும் என வில்வித்தை வீரர்கள் அபிஷேக் வர்மா, ரஜத் செளஹான் வலியுறுத்தியுள்ளனர்.
அதே போல் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் சந்தீப் குப்தா பெயர் துரோணாச்சார்யா பட்டியலில் இருந்து விடுபட்டதற்கு நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ரா வேதனை தெரிவித்தார்.
வழக்கு: பஜ்ரங் புனியா எச்சரிக்கை: கேல்ரத்னா விருதுக்குரியவர் பட்டியலில் தனது பெயர் விடுபட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என எச்சரித்துள்ளார். காமன்வெல்த், ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற புனியாவை மல்யுத்த சம்மேளனம் கேல்ரத்னா விருதுக்கு பரிந்துரைத்தது. 
ஆனால் கோலி, சானுவை மத்திய அரசு தேர்வு செய்தது. இது எனக்கு மிகுந்த அதிர்ச்சி, வேதனையை தருகிறது. எனது பெயரை புறக்கணித்ததின் காரணத்தை தெரிவிக்கவேண்டும். விருதுக்கு தகுதியானவன் நான். கடைசி வாய்ப்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடருவேன் என்றார்.

அர்ஜுன விருது 
நீரஜ் சோப்ரா, ஜின்ஸன் ஜான்சன், 
ஹிமா தாஸ் (தடகளம்), 
சிக்கிரெட்டி (பாட்மிண்டன்), 
சதீஷ்குமார் (குத்துச்சண்டை), 
ஸ்மிருதி மந்தானா (கிரிக்கெட்), 
சுபாங்கர் சர்மா (கோல்ப்), 
மன்பிரீத் சிங், சவிதா (ஹாக்கி), 
ரவி ரத்தோர் (போலோ), 
ராஹி சர்னோபத், அங்குர் மிட்டல், 
ஷிரேயஸி சிங் (துப்பாக்கி சுடுதல்), 
மனிகா பத்ரா, சத்யன் (டேபிள் டென்னிஸ்), 
ரோஹன் போபண்ணா (டென்னிஸ்), 
சுமித் (மல்யுத்தம்), பூஜா கடியன் (வுஷு), 
அங்குர் தர்மா (பாரா தடகளம்), 
மனோஜ் சர்கார் (பாரா பாட்மிண்டன்).

துரோணாச்சார்யா விருதுகள்
சி.கே.குட்டப்பா (குத்துச்சண்டை), 
விஜய் சர்மா (பளு தூக்குதல்), 
சீனிவாச ராவ் (டேபிள் டென்னிஸ்), 
சுக்தேவ் சிங் (தடகளம்), 
கிளாரென்ஸ் லோபோ (ஹாக்கி), 
தாரக் சிங் (கிரிக்கெட்), 
ஜிவன் குமார் (ஜூடோ), 
பீடு (தடகளம்)-வாழ்நாள் சாதனையாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com