கொரிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திரங்கள் சாய்னா நெவால், சமீர்வர்மா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சூப்பர் சீரிஸ் போட்டியின் ஒரு பகுதியாக இப்போட்டி செவ்வாய்க்கிழமை சியோலில் தொடங்குகிறது.
ஆசியப் போட்டியில் வெண்கலம் வென்ற சாய்னா, ஜப்பான் ஓபன் போட்டியில் பங்கேற்கவில்லை. பின்னர் சீன ஓபன் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். துவக்க ஆட்டத்தில் கொரியாவின் கிம் ஹையோ மின்னை எதிர்கொள்கிறார்.
ஆடவர் பிரிவில் சமீர் வர்மா மட்டுமே ஒற்றையர் பிரிவில் பங்கேற்கிறார். கிடாம்பி ஸ்ரீகாந்த் இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.
மேலும் வைஷ்ணவி ரெட்டி, அஜய் ஜெயராம், வைதேகி செளத்ரி, முக்தா அக்ரே ஆகியோரும் இப்போட்டில் கலந்து கொள்கின்றனர்.