மகளிர் டி20: தொடரை வென்றது இந்தியா

இலங்கையுடன் நடைபெற்ற மகளிர் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. 
மகளிர் டி20: தொடரை வென்றது இந்தியா


இலங்கையுடன் நடைபெற்ற மகளிர் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. 
முதல் ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. மூன்றாவது ஆட்டத்திலும் இந்தியா வென்றிருந்தது.
இந்நிலையில் திங்கள்கிழமை 4-ஆவது ஆட்டம் நடைபெற்றது.
முதலில் ஆடிய இலங்கை அணி 17 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை எடுத்தது. சசிகலா சிறிவர்தனே 40 ரன்களை குவித்தார். 
இந்திய வீராங்கனை அனுஜா பட்டில் 3-36 விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய இந்திய அணி 1 ஓவர் மீதமிருக்கையில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 137 ரன்களை எடுத்து வென்றது.
ஜெமியா ரோட்ரிக்ஸ் 52, அனுஜா பட்டீல் 54 ஆகியோர் அபாரமாக ஆடி வெற்றிக்கு வித்திட்டனர். 41 ரன்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்த நிலையில் ஜெமியா-அனுஜா இணை சிறப்பாக ஆடியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com