புது தில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை திடிரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது.
உடல் நலக் குறைவு காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல் நலம் பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று மாலை திடீரென முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தி அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உடனடியாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.