சென்னை: அனைத்துக் காவல் பிரிவினரும், பாதுகாப்புப் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக காவல்துறையினருக்கு ஆணையர் ஜார்ஜ் பிறப்பித்துள்ள உத்தரவில், சென்னையில் உள்ள அனைத்து காவல் பிரிவினரும் பாதுகாப்பு பணியில் கவனம் செலுத்த வேண்டும்.
தனியார் வாகனங்களை தேவைப்படும் அளவுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேவையான காவலர்கள் மட்டுமே காவல்நிலையத்தில் இருக்க வேண்டும் எனறும் மறு உத்தரவு வரும் வரை காவல் அதிகாரிகள் அனைவரும் பணியில் இருக்க வேண்டும் என்றும் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.