சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனையின் செயல் இயக்குநர் சங்கீதா ரெட்டி தெரிவித்துள்ளார்.
சங்கீதா ரெட்டி சில நிமிடங்களுக்கு முன்பு தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "தீவிர சிகிச்சைகளுக்குப் பிறகும் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாகவே" உள்ளார் என்று பதிவு செய்துள்ளார்.
சற்று முன்பு, அப்பல்லோ வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.