உள்ளாட்சித் தேர்தல் ரத்துக்கு எதிரான மேல்முறையீடு: விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, அது தொடர்பான அரசாணையை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்ததோடு புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வானது, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். இந்த வழக்கு புதன்கிழமை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை பொங்கல் விடுமுறைக்கு பின்னர் விசாரிப்பதாக கூறி ஜனவரிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com