13- இல் மிலாது நபி: மதுக்கடைகளை மூட உத்தரவு

நபிகள் நாயகம் பிறந்த நாளை (மிலாது நபி) முன்னிட்டு, டிசம்பர் 13-இல் மதுக்கடைகளை மூட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் பி.மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

நபிகள் நாயகம் பிறந்த நாளை (மிலாது நபி) முன்னிட்டு, டிசம்பர் 13-இல் மதுக்கடைகளை மூட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் பி.மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த விவரம்:-
வருகிற டிசம்பர் 13-ஆம் தேதி நபிகள் நாயகம் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் (டாஸ்மாக்), அதனைச் சார்ந்த கிளப் பார்கள், ஹோட்டல் பார்கள், தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். அதுபோல், அன்றைய தினத்தில் மது விற்பனை செய்யவும் கூடாது. விதிகளை மீறி பார்களில் மது விற்பனை செய்யப்பட்டால் உரியோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com