சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகக் கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கில், அவர் விடுதலை செய்யப்பட்டார்.
சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அருள் முருகன், வைகோவை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
கடந்த 2008ல் சென்னை பிராட்வே கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக வைகோ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. கியூ பிரிவு போலீஸார் கூறிய குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படாததால், வைகோவை விடுதலை செய்வதாக நீதிபதி அருள் முருகன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.