தேர்தல் பிரசாரத்துக்கு திமுக அழைக்கவில்லை

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரத்துக்கு திமுக அழைக்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் மறைமுகமாகக் கூறினார்.
தேர்தல் பிரசாரத்துக்கு திமுக அழைக்கவில்லை

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரத்துக்கு திமுக அழைக்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் மறைமுகமாகக் கூறினார்.
 இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட்டது. புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டது. அந்த அடிப்படையில்தான் இப்போதும் தேர்தலைச் சந்திப்போம்.
 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் வியாழக்கிழமை (அக்.20) ஆலோசிக்க உள்ளோம். அதன் பிறகு தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா என்பது தொடர்பாக முறைப்படி அறிவிப்பேன் என்றார். திமுகவை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவீர்களா என்று கேட்டபோது, அழைத்தால் கண்டிப்பாகப் பிரசாரம் செய்வேன். ஆனால், திமுக தோழமைக் கட்சியைப் பிரசாரத்துக்கு அழைத்ததா என்று அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்றார் திருநாவுக்கரசர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com