சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து கேட்டறிய, ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்.
மருத்துவமனைக்கு வந்த வித்யாசாகர் ராவ், முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் சுமார் 25 நிமிடங்கள் பேசினார். அப்போது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும்,உடல் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.
பிறகு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். மருத்துவமனை வளாகத்தில் இருந்த செய்தியாளர்களை அவர் சந்திக்கவில்லை.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து கேட்டறிய இந்த மாதம் 1ம் தேதி அப்பல்லோவிற்கு வந்த தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று இரண்டாவது முறையாக மருத்துவமனைக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.