தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடந்த வாரம் நேரிட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடந்த 16ம் தேதி ஐந்தாவது யூனிட்டில் ஏற்பட்ட விபத்தில் ஆறுமுகம், முருகப்பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த ராஜபாண்டி மகன் விக்னேஷ் (21)
மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அவர் சனிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், தூத்துக்குடி அனல் மின் நிலைய விபத்தில் உயிரிந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.