சென்னை: எண்ணூர், கடலுர், நாகை, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் இன்று 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி வடக்கு - வடமேற்காக நகர்ந்து வருகிறது. இதனால், இந்தியாவின் ஒடிசா உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கடலில் உருவாகியுள்ள கியான்ட் புயல் காரணமாக தமிழகத்தில் எண்ணூர், கடலுர், நாகை, பாம்பன், தூத்துக்குடி புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் இன்று 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.