மக்கள் நலக் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை: தொல்.திருமாவளவன்

மக்கள் நலக் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

மக்கள் நலக் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
 சென்னை கே.கே.நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், "திமுக நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டம் குறித்தும், அதில் பங்கேற்பது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணியின் தோழமைக் கட்சித் தலைவர்களுடன் மீண்டும் பேசுவது' எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனடிப்படையில், கூட்டத்துக்குப் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை திருமாவளவன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், "காவிரிப் பிரச்னையை தேர்தல் அரசியலோடு முடிச்சுப் போட்டு பார்க்க வேண்டாம். அதை பொதுப் பிரச்னையாகவே பார்ப்போம் என்கிற வகையில், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் எடுத்த முடிவின் அடிப்படையில் தோழமைக் கட்சிகளைச் சந்தித்தோம். எனவே, மக்கள் நலக் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com