வடகிழக்கு பருவ மழை அக்.30ல் தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 30ம் தேதியில் தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை அக்.30ல் தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்


சென்னை:  தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 30ம் தேதியில் தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 30ம் தேதியில் தொடங்க சாதகமான சூழ்நிலை உருவாகும்.

தற்போது மத்திய கிழக்கு வங்கக் கடலில் கியான்ட் புயல் நிலை கொண்டுள்ளது. கியான்ட் புயல் மத்திய மேற்கு திசையை நோக்கி நகர்கிறது. இதனால்
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மீனவர்கள் ஆந்திர பகுதியை நோக்கி மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com