3 தொகுதிகளில் பாஜக தனித்துப் போட்டி: வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள 3 தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
3 தொகுதிகளில் பாஜக தனித்துப் போட்டி: வேட்பாளர்கள் அறிவிப்பு


புது தில்லி: தமிழகத்தில் உள்ள 3 தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை, அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளில் நவம்பர் 19ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உளளது. இதில் பாஜக தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த மூன்று தொகுதிகளிலும் போட்டியிடும்  வேட்பாளர்களின் பெயர்கள் தில்லியில் இன்று மாலை வெளியிடப்பட்டது.

அதன்படி, அரவக்குறிச்சி தொகுதியில் எஸ்.பிரபு, திருப்பரங்குன்றம் தொகுதியில் பேராசிரியர் சீனிவாசன், தஞ்சையில் எம்.எஸ். ராமலிங்கம் ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com