சென்னை: தமிழக நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்துள்ளார்.
திமுக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய நகலை, அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஸ்டாலின் அளிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
காவிரி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் கடந்த 25ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. இதில், காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்க சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.